மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

பறவை மோதியதால் அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்: 172 பேர் தப்பினர்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை காலை வந்த ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் அதன் முன்பகுதி

Updated On :24 ஜூலை 2018, 4:51 am IST

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை காலை வந்த ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் அதன் முன்பகுதி சேதமடைந்தது. இதையடுத்து அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த 172 பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர்.
சிங்கப்பூரில் இருந்து விமானப் பணியாளர்கள் உள்பட 172 பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சென்னைக்கு திங்கள்கிழமை காலை வந்தது. இந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க சுமார் 400 அடி உயரத்தில் பறந்தபோது அந்த விமானத்தின் மீது பறவை மோதியது. இதில், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. 
இதையடுத்து, விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதன் காரணமாக மீண்டும் அந்த விமானம் சிங்கப்பூர் செல்வதற்காக திட்டமிட்டிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் செல்வதற்கு தயாராக இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. 
அடிக்கடி விமானங்கள் பறவைகளால் சேதமடைவதைத் தடுக்க விமான நிலையப் பகுதிகளில் பறவைகள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.