ஜூன் 11-இல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர் குறைதீர் கூட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடர்பான வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில்
Updated on
1 min read

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடர்பான வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
இந்தக் குறைதீர் கூட்டத்தில், காலை 10.30 முதல் 11.30 மணி வரை வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை நிறுவனங்களின் உரிமையாளர்கள், மாலை 4 முதல் மாலை 5 மணி வரை பி.எஃப் பங்களிப்பிலிருந்து விலக்குப் பெற்ற அம்பத்தூர் எல்லைக்கு உள்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
குறைதீர் கூட்டம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், 3-ஆவது தளம், ஆர் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்பேர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை-37' என்ற முகவரியில் நடைபெறுகிறது. 
கூடுதல் விவரங்களுக்கு 044- 26350080, 26350120 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என உதவி பி.எஃப். மண்டல ஆணையர் எம்.குமாரவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com