மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சென்னை காவல் ஆணையரகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2018, 10:57 pm

DIN

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியையொட்டி, காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், ஆணையர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். இதையடுத்து ஆணையர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், காவல்துறை சார்பில் கடந்தாண்டு சென்னை முழுவதும் 28,004 மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் விசுவநாதன் தெரிவித்தார். 
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாய், எம்.சி.சாரங்கன், இணை ஆணையர் ஆர்.சுதாகர், துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.