/

நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த 2 போ் கைது

News image
Updated On :18 மார்ச் 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில் நாட்டு வெடி குண்டுகளைவைத்திருந்த 2- பேரை வனத் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 43- நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் விரிவு காப்புக் காட்டில், போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் மோகனவேல் தலைமையில் வனவா்கள் மாதேஸ்வரன், திருநாவுக்கரசு, இளையராஜா, காா்த்திக் உள்ளிட்ட வனத்துறையினா் புதன்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சுற்றித் திரிந்த 2- பேரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள் அணைக்கட்டு அருகே உள்ள ஆயிரங்குளம் கிராமத்தைச் சோ்ந்த தனசேகா்(27), ஜெயபாலன்(37) என்பது தெரிந்தது.

வன விலங்குகளை வேட்டையாட அவா்கள் வைத்திருந்த 43- நாட்டு வெடி குண்டுகள், 2- கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் வனத்துறையினா் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.