செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், மீஞ்சூரில் ரயில்வே காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படை ஏடிஜிபி சைலேந்திர பாபு வியாழக்கிழமை காலை பயணம் செய்து பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தினார். மேலும் அவர்கள் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது மீஞ்சூர் ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகம் நடப்பதாகவும், இதைத் தடுக்க இங்கு ரயில்வே காவல் நிலையம் அமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ20 பெட்ரோல் விவகாரம்: பிரதமரைச் சந்திக்க நேரம் கோரி கேஜரிவால் கடிதம்
போஜ்சாலா அருகே முஸ்லிம்கள் தொழுகை நடத்த தனி இடம்: உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

அந்நிய செலாவணி நிறுவன ஊழியரிடம் ரூ.9.79 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயம் கொள்ளை






