சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை கட்டடத்தில் திங்கள்கிழமை காலை திடீரென புகை எழும்பியது. சிறிது நேரத்தில் அங்கிருந்த பொருள்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. மேலும் தீ வேகமாக பரவத் தொடங்கியது.இதைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்துக்கு காரணம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் அங்கிருந்த ஏ.சி., இன்வெர்ட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








