ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

அரசு மனநல காப்பகத்தில் சமையலர், நாவிதர் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள சமையலர், நாவிதர் பணியிடங்களுக்கு நவம்பர் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர்

Updated On :6 நவம்பர் 2018, 2:49 am IST


சென்னையில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள சமையலர், நாவிதர் பணியிடங்களுக்கு நவம்பர் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள 7 சமையலர், 5 நாவிதர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
தகுதிகள்: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் 32 வயதுக்கு மிகாமலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடினர் 35 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் வியாழக்கிழமை (நவ. 8) முதல் வெள்ளிக்கிழமை (நவ. 9) வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 14-ஆம் தேதிக்குள் இயக்குநர், அரசு மனநல காப்பகம், கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.