ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மென்பொறியாளர் வீட்டில் திருட்டு

சென்னை மதுரவாயல் அருகே மென்பொறியாளர் வீட்டில் தங்கநகைகள், பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார்

Updated On :9 அக்டோபர் 2018, 4:20 am IST


சென்னை மதுரவாயல் அருகே மென்பொறியாளர் வீட்டில் தங்கநகைகள், பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரவாயல் அருகே உள்ள வானகரம் முதலாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சு.மதுசூதனன் (32). மென்பொருள் பொறியாளரான இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மதுசூதனன், கடந்த 4-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் ராமாபுரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்குச் சென்றார்.
அங்கிருந்து மதுசூதனன், ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.11 ஆயிரம் ரொக்கம் திருடு போனதை அறிந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் சென்ட்ரல் அவென்யூவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் எஸ்.கே.ரவி (62). இவர் கடந்த 6-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை ரவி வீடு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், 4 விலையுயர்ந்த செல்லிடப்பேசிகள் ஆகியன திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.