சென்னையில் உள்ள மகளிர் விடுதிகளை உடனடியாக ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்யுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெண்கள் தங்கும் விடுதிகளை நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளை Tamil Nadu Hostels and Homes for Women and Children Regulation Act (தமிழ்நாடு விடுதிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லம் ஒழுங்குமுறை சட்டம்) 2014-ன் கீழ் கட்டாயம் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, பெண்கள், நலன் மற்றும் பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள மகளிர் விடுதிகளை உடனடியாக ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தை இணையதளம் வாயிலாக Tamil Nadu Hostels and Homes for Women and Children Regulation Rules, 2014 என்ற தரவிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் விடுதிகளை நடத்துவோர் மீது பிரிவு 20 (2) -ன் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செய்தி வாயிலாக வரப் பெற்ற நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் சென்னையில் உள்ள அனைத்து மகளிர் விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் இயங்கும் பெண்கள் பணிபுரியும் விடுதிகள் இது தொடர்பான மேல் விவரங்களை பெற மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் ஆட்சியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுலுடன் சேர்ந்து கார்கேயின் மேன்மை கெடுகிறது : அமித் ஷா

ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவு

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

