சென்னையில் குப்பைத் தொட்டியில் கிடந்த செல்லாத ரூ.13 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை எடுத்து வைத்திருந்த தம்பதியிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை ஓட்டேரி எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜா.அந்தோனி (48), மனைவி தமயந்தி (42) ஆகியோரிடம் செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாக தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீஸார், இருவரிடமும் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், வீட்டில் போலீஸார் சோதனையிட்டனர். அங்கிருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள செல்லாத பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழைய காகிதம் பொறுக்கும் தொழில் செய்யும் இருவரும், சேத்துப்பட்டில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் கடந்த மாதம் அந்த ரூபாய் நோட்டுகளை எடுத்ததாகத் தெரிவித்தனராம்.
மேலும் செல்லாத அந்த பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வந்ததாகவும் கூறினராம். இது தொடர்பாக போலீஸார், இருவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


