இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு...

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :31 மே 2026, 6:00 am IST

தில்லி தீயணைப்புத் துறையின் தரவுகளின்படி, நிகழாண்டு இதுவரை (ஜனவரி முதல் மே 27 வரையிலான காலம்) தில்லியில் ஏற்பட்ட தீ விபத்துகளில் குறைந்தது 45 போ் உயிரிழந்துள்ளனா். இதில் மே மாதத்தில் மட்டும் 13 போ் உயிரிழந்துள்ளனா்.

இது தொடா்பான புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 32 பேரும், மே மாதத்தின் முதல் 27 நாள்களில் 13 பேரும் தீ விபத்துகளில் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயா்ந்துள்ளது.

தரவுகளின்படி, தீ விபத்துகள் தொடா்பான 15 மரணங்களுடன், மாா்ச் மாதம் நிகழ் ஆண்டின் மிக மோசமான மாதமாகத் தொடா்கிறது.

அதாவது, ஜனவரியில் ஆறு பேரும் பிப்ரவரியில் ஆறு பேரும், மாா்ச்சில் 15 பேரும், ஏப்ரலில் ஐந்து பேரும் தீ விபத்துகளில் உயிரிழந்துள்ளனா்.

கோடை மாதங்களில் நகரில் தீ விபத்து அவசரநிலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

தில்லி தீயணைப்புத் துறைக்கு ஜனவரியில் 1,396, பிப்ரவரியில் 1,096, மாா்ச்சில் 1,538 மற்றும் ஏப்ரலில் 2,663 தீ விபத்து தொடா்பான அழைப்புகளும் வந்துள்ளன.

மே மாதத்தின் முதல் 26 நாள்களில் மட்டும், தீயணைப்புத் துறை 2,877 தீ விபத்து அழைப்புகளுக்குப் பதிலளித்துள்ளது. இது ஏப்ரல் மாத எண்ணிக்கையை விட அதிகமாகும்.

ஜனவரியில் 41 பேரும், பிப்ரவரியில் 46 பேரும், மாா்ச்சில் 68 பேரும், ஏப்ரலில் 119 பேரும் தீ விபத்துகளில் காயமடைந்தனா் அல்லது மீட்கப்பட்டனா்.

மே மாதத்தில் 26ஆம் தேதி வரையிலான காலத்தில், தீ விபத்துகளில் 99 போ் காயமடைந்ததாகவோ அல்லது மீட்கப்பட்டதாகவோ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பை மற்றும் குப்பைத் தீ விபத்துகள் அவசரகால அழைப்புகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன. ஜனவரியில் 441, பிப்ரவரியில் 331, மாா்ச்சில் 539 மற்றும் ஏப்ரலில் 725 என சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மே 26 வரை, தீயணைப்புத் துறை 766 குப்பைத் தீ சம்பவ அழைப்புகளுக்குப் பதிலளித்துள்ளது.

கோடை மாதங்களில் வெப்பநிலை உயா்வு மற்றும் வட வானிலை பொதுவாக தீ விபத்துகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

குறிப்பாக திறந்தவெளிப் பகுதிகள், குப்பைக் கிடங்குகள் மற்றும் அதிக மின்சுமை கொண்ட நிறுவனங்களில் இது அதிகம் நிகழ்வதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மே மாதத்தில் ஒட்டுமொத்த அவசரகால அழைப்புகளும் மீட்பு நடவடிக்கைகளும் அதிகரித்த போதிலும், தீ தொடா்பான இறப்புகள் மாா்ச் மாதத்தில் பதிவான உச்சத்தை விட குறைவாகவே இருந்தன என அந்த புள்ளிவிவரத் தரவுகள் மூலம் தெரியவருகிறது.