கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி: முதல்வர் விஜய்கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் டி.கே. சிவகுமார்!
/

பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவு: மாணவர் தற்கொலை

பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் சிவகாசியில் பள்ளி மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

Updated On :24 ஏப்ரல் 2019, 3:58 am IST

பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் சிவகாசியில் பள்ளி மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  
  விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேரு சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். காகித அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் நவீன்(18), சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். பிளஸ் 2 தேர்வில் இவர், 600-க்கு 298 மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் மன வேதனையில் இருந்து வந்தாராம். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.