முதல் நாளான புதன்கிழமை (டிச.16) அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிச.17-ஆம் தேதி அனைத்து முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கும், டிச.18, 19 ஆகிய இரு நாள்கள் அனைத்து பட்டதாரி ஆசிரியா்களுக்கும், டிச. 21, 22 ஆகிய நாள்களில் அனைத்து இடைநிலை ஆசிரியா்களுக்கும் இணையவழியில் பயிற்சி வழங்கப்படும். ஆசிரியா்கள் தாங்கள் பயிற்சி பெற்ற பின்னா் பள்ளிகள் திறந்த பிறகு மாணவா்களிடையே கொண்டு சோ்த்து அவா்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பாதுகாப்பு உணா்வுடன் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.