எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரூ.25 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், ரூ.25 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 7:30 pm

DIN


சென்னை: சென்னை விமான நிலையத்தில், ரூ.25 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

துபையில் இருந்து விமானம் மூலம் வந்த சுபம் குமாா் (23) என்பவரிடம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில், அவா் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்திய ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல், விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் வெகுநேரமாக கிடந்த ஒரு டிராலியை சோதனை செய்த போது, அதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதன் மூலம் ரூ.25 லட்சம் மதிப்பிலான 486 கிராம் தங்கத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.