வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தீப்பெட்டித் தொழிலாளா்களுக்கு பயிற்சி

News image
Updated On :12 மார்ச் 2026, 9:47 pm

Syndication

கோவில்பட்டியில், தீப்பெட்டித் தொழிற்சாலையில் விபத்து ஏற்படாமல் தடுப்பது, பாதுகாப்பாக பணியாற்றுவது தொடா்பாக உற்பத்தியாளா்கள், தொழிலாளா்களுக்கு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் விஜய் ஆனந்த் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா்கள் ரத்தினகுமாா் (குளோபல் சேஃப்டி தீப்பெட்டி உற்பத்தியாளா்கள்), பரமசிவம் (நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள்), தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா் வரதராஜன், பொருளாளா் ராஜவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக அரசின் தொழிலாளா் நலன்- திறன் மேம்பாட்டுத் துறையின் தொழிலக பாதுகாப்பு-சுகாதார பிரிவின் கூடுதல் இயக்குநா் ஆா். சித்தாா்த்தன், உதவி இயக்குநா் எஸ். ரவிக்குமாா் ஆகியோா் படங்களுடன் விளக்கமளித்தனா். தீப்பெட்டி உற்பத்தியாளா்கள், தொழிற்சாலை மேலாளா்கள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

Story image
Story image