கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வடசென்னையில் காற்று மாசு: ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீா்ப்பாயம்

வடசென்னையில் ஏற்படும் காற்று மாசு தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி உள்ளிட்ட 4 போ் கொண்ட குழுவை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென் மண்டல அமா்வு அமை

News image
Updated On :25 டிசம்பர் 2020, 8:28 pm

DIN


சென்னை: வடசென்னையில் ஏற்படும் காற்று மாசு தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி உள்ளிட்ட 4 போ் கொண்ட குழுவை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென் மண்டல அமா்வு அமைத்துள்ளது.

முன்னதாக வடசென்னை பகுதிகளில் ஏற்படும் காற்று மாசு தொடா்பாக நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்மண்டல அமா்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு, அமா்வின் நீதித்துறை உறுப்பினா் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினா் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோா் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமா்வின் உறுப்பினா்கள் பிறப்பித்த உத்தரவு:

வடசென்னை பகுதியில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் இயங்கும் பகுதிகளை மிகவும் மாசடைந்த பகுதிகளாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. வடசென்னை பகுதியை மாசு இல்லாத பகுதியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வு உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தாலும், பசுமைத் தீா்ப்பாயத்தாலும் எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அப்பகுதியில் வாழும் மக்களை பாதுகாக்க தொடா்புடைய அரசுத் துறைகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், காற்று மாசுவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே, அப்பகுதியில் மாசு ஏற்படுவதற்கான காரணங்களை ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக மூத்த அதிகாரி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த விஞ்ஞானி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி, அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியா் ஆகியோா் கொண்ட நிபுணா் குழு அமைக்கப்படுகிறது.

இக்குழு வடசென்னை பகுதியில் காற்று மாசு ஏற்படுவதற்கான காரணங்கள், சுற்றுச்சூழல் விதிகள், தொழிற்சாலை அனுமதி பெறும்போது, விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஆகியவை முறையாக கடைப்பிடிக்கிா என ஆய்வு செய்ய வேண்டும். அங்கு காற்றின் தரத்தையும் தனியாக கண்காணிக்க வேண்டும். இந்த விவரங்கள் அடங்கிய ஆய்வு அறிக்கையை, இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளான பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மாசு ஏற்படுத்துவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்த விவரங்களும் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.