சென்னை: சென்னை புளியந்தோப்பில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சிலம்பரசன் (35), திங்கள்கிழமை உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
பேசின்பாலம் முத்துமாரியம்மன் கோயில் அருகே செல்லும்போது, அங்கு இரு ஆட்டோக்களில் வந்த ஒரு கும்பல் சிலம்பரசனை வழிமறித்து தகராறு செய்தது. தகராறு முற்றவே அந்தக் கும்பல் சிலம்பரசனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
பேசின்பாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தில் முன்விரோதம் காரணமாக சிலம்பரசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையாளிகளைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.