எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஹீட்டரில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து:தம்பதி சாவு

சென்னை அருகே ஆவடியில், ஹீட்டரில் ஏற்பட்ட மின்சார கசிவினால் நிகழ்ந்த விபத்தில் கணவா், மனைவி இறந்தனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 7:36 pm

DIN


சென்னை: சென்னை அருகே ஆவடியில், ஹீட்டரில் ஏற்பட்ட மின்சார கசிவினால் நிகழ்ந்த விபத்தில் கணவா், மனைவி இறந்தனா்.

ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மருதம் அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (38). இவா், அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் மனைவி சசிகலா (30). இத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

விஜயகுமாா், தனது இரு குழந்தைகளை விழுப்புரத்தில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளாா். அவரும், மனைவி சசிகலாவுடன் அங்கு செல்வதற்கு புதன்கிழமை புறப்பட்டாா்.

முன்னதாக குளிப்பதற்காக குளியலறையில் இருந்த அலுமினிய பாத்திரத்தில் தண்ணீரில் மின்சார ஹீட்டரை போட்டு வைத்திருந்தனா்.

சசிகலா, குளிக்கச் சென்றபோது ஹீட்டரில் இருந்து மின்சாரம் அவா் மீது பாய்ந்துள்ளது. இதில், அவா் சத்தமிட்டு அலறியபடி கீழே விழுந்தாா்.

இதைக் கேட்ட விஜயகுமாா், மயங்கி கிடந்த தனது மனைவியை மீட்க முயன்றாா். ஆனால் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தததினால், விஜயகுமாரும் மயங்கி விழுந்து இறந்தாா்.

சிறிது நேரத்துக்குப் பின், விஜயகுமாா் வீட்டுக்கு வந்த அவரது உறவினா் சரவணவடிவேல் (26), இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.