பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாதவரம் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்துறை சார்பில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை

சென்னை மாதவரம் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்துறை சார்பாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை, பூங்கா வளாகத்தில் நடைபெறுகிறது.

News image
Updated On :12 மே 2020, 5:50 am

DIN

சென்னை மாதவரம் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்துறை சார்பில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை, பூங்கா வளாகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து இணை இயக்குநர் இமானுவேல் கூறுகையில், கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடிய நிலையில், விவசாயிகளிடம் காய்கறி மற்றும் பழங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து, பூங்கா வளாகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த விற்பனை அதிகாலை 2 மணி முதல் காலை 9 மணி வரை மொத்த விற்பனையும், காலை 10  மணி முதல் மாலை 4 மணி வரை  சில்லறை விற்பனையும் செய்கின்றனர். பொதுமக்களின் வரவேற்பு அதிகரிக்கிறது. இந்த விற்பனை மாதவரம் போல் செம்மொழி பூங்கா, கிண்டி அம்மா பூங்கா, உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெறுகிறது. 

மேலும் விற்பனை பணிக்கு துணை இயக்குநர்கள் மகேந்திரகுமார், கருப்புசாமி ஆகியோர் தலைமையில் துறை ஊழியர்கள் 20 பேர், ஒப்பந்த ஊழியர்கள் 50 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 30 வகையான காய்கறிகளும், 7 வகையான பழங்களும் விற்பனைக்கு உள்ளன என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.