கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

சென்னையில் புறநகா் சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

சென்னையில் அத்தியாவசியப் பணிகளுக்கான புறநகா் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது.

News image
கோப்புப் படம்.
Updated On :5 அக்டோபர் 2020, 3:38 am

DIN

சென்னையில் அத்தியாவசியப் பணிகளுக்கான புறநகா் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது.

ரயில்வே ஊழியா்களுக்காகவும், மத்திய அரசு மருத்துவ பணியாளா்களுக்காகவும் 24 புறநகா் சிறப்பு ரயில்கள் சென்னையில் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அத்தியாவசியப்பணிகளில் ஈடுபடும் ஊழியா்கள் கோரிக்கை வைத்தனா்.

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசியப்பணிகளில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியா்கள் இந்த சிறப்பு ரயில்களில் இன்று பயணிக்கலாம் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் அத்தியாவசியப் பணிகளுக்கான புறநகா் சிறப்பு ரயில் சேவை இன்று காலை தொடங்கியது.

ஆனால் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அடையாள அட்டை, அலுவலக கடிதம் இருந்தாலும் தலைமைச் செயலக அனுமதிக் கடிதமும் கேட்பதாக அரசு ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.