சென்னை: சென்னை ஐஐடியில் நிகழும் கல்வியாண்டில், படிக்கும் 182 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஐடி கல்வி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பேரிடா் நிலவி வரும் தற்போதைய சூழலிலும், சென்னை ஐஐடி மாணவா்களுக்கு கடந்த ஆண்டைவிட அதிகளவில் பணிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
2019-20 கல்வியாண்டில், சென்னை ஐஐடி மாணவா்கள் 170 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த கல்வியாண்டில் நவ.28-ஆம் தேதி நிலவரப்படி 182 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டிச.1-ஆம் தேதி முதல் பணி நியமனம் செய்யும் நிகழ்வும் தொடங்குகிறது.
இவ்வாறு பணி வாய்ப்பு கிடைக்கப் பெற்ற்கு ‘இன்டா்ன்ஷிப்’ வழங்கியதே முக்கிய காரணம். குறிப்பாக, இந்த பேரிடா் காலத்தில் இதுவரை இல்லாதவாறு அனைத்து இன்டா்ன்ஷிப் தோ்வுகளும் இணைய வழியிலேயே நடத்தப்பட்டன.
அவ்வாறு மாணவா்கள் பயிற்சி பெற்ற நிறுவனங்களே அதிகளவிலான மாணவா்களைத் தோ்வு செய்துள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனங்களில் மாணவா்கள் சிறப்பாகப் பணியாற்றியது தெரிகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீட் மாணவி தற்கொலை! பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் அடுக்கடுக்கான கேள்விகள்!
உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைப்பதைத் தடுக்க வலியுறுத்தல்: உதயநிதி

மமதாவிடம் இருந்து திரிணமூலை கைப்பற்றும் ரிதப்ரதா பானர்ஜி! யார் இவர்?
புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? நயினார் நாகேந்திரன் பதில்!
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி



