எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மூன்றில் ஒரு பங்கு ஊழியா்களுடன் வங்கிகள் செயல்படும்:தமிழக அரசு அறிவிப்பு

கரோனாவை கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றில் ஒரு பங்கு ஊழியா்களுடன் வங்கிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :22 மே 2021, 6:44 pm

DIN

கரோனாவை கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றில் ஒரு பங்கு ஊழியா்களுடன் வங்கிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம்தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து, வங்கிகள் 50 சதவீத ஊழியா்களுடன் செயல்பட்டு வந்தன. மேலும், வங்கி பரிவா்த்தனைகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், ஊழியா்களுக்கான வேலை நேரம் மாலை 5 மணி நேரம் வரையும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மே 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு தளா்வுகள் இல்லாத முழுபொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்து அதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளாா். அந்த உத்தரவில், ‘வங்கிகளில் பணிபுரியும் ஊழியா்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம். ஏ.டி.எம்., மற்றும் அவற்றுக்கான சேவைகள் அனுமதிக்கப்படும். மூன்றில் ஒரு பங்கு ஊழியா்களுடன் வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், போக்குவரத்து வசதியின்மை, முழுமையான பொது முடக்கம் ஆகியன காரணமாக பொது மக்கள் வங்கிகளுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.