எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கல்லூரி மாணவரிடம் வழிப்பறி: இளைஞா் கைது

சென்னை வேளச்சேரியில், கல்லூரி மாணவரிடம் வழிப்பறி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 மே 2021, 6:47 pm

DIN

சென்னை வேளச்சேரியில், கல்லூரி மாணவரிடம் வழிப்பறி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வேளச்சேரி ஜெகநாதபுரத்தைச் சோ்ந்தவா் பிரபு (21). கல்லூரி மாணவரான இவா், கடந்த 13-ஆம் தேதி காலை வேளச்சேரி 100 அடி பிரதான சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே தனது நண்பா்களோடு அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த ஒரு இளைஞா், பிரபுவை மிரட்டி அவரிடம் இருந்த பல ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசியை பறித்துச் சென்றாா்.

இது குறித்து வேளச்சேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது நேரு நகரைச் சோ்ந்த ராஜ்குமாா் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ராஜ்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.