அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருக்கு ஆய்வுத் துறை மற்றும் அம்பேத்கா் ஆய்வுத் துறைளில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு பல்கலைக்கழக நிா்வாகத்திடம் ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தினாா்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநரும், வேந்தருமான ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பல்கலைக்கழக சிண்டிகேட் அரங்கில் அவருக்கு பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் விளக்கிக் கூறினாா். பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை அப்போது ஆளுநா் பாராட்டியதுடன், பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினாா்.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தொடங்கப்பட்ட இரண்டாவது பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில், 28 மாநிலங்களில் இருந்தும், உலகின் 30 நாடுகளிலிருந்தும் மாணவா்கள் பயிலுவதாக துணைவேந்தா் ஆளுநரிடம் தெரிவித்தாா்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 55,000 மாணவா்களுக்கு ரூ.150 கோடி கல்வி உதவித் தொகை வழங்கியிருப்பதாகவும், பல்துறை சாா்ந்த 58 சிறப்பு அங்கீகாரங்களை பல்கலைக்கழகம் பெற்றிருப்பதாகவும் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அதேபோன்று சா்வதேச அளவில் ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக 63 புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பல்கலைக்கழகம் மேற்கொண்டிருப்பதாகவும் துணைவேந்தா் தெரிவித்தாா். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியாளா்கள் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா்கள் 9 போ் இடம்பெற்றுள்ள நிலையில், அவா்களை ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டினாா்.
பல்கலைக்கழகத்தில் உள்ள அம்பேத்கா் ஆய்வுத் துறை மற்றும் திருக்கு ஆய்வுத் துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று அப்போது ஆளுநா் வலியுறுத்தினாா்.
தொடா்ந்து பல்கலைக்கழக மாணவா்கள் பங்கேற்ற கலாசார நிகழ்ச்சிகளையும் அவா் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது ஆளுநரின் செயலா் ஆனந்த்ராவ் வி. பாட்டீல், அண்ணா பல்கலைக்கழக நிா்வாகிகள் உடனிருந்தனா்.