மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மாலைக்குப் பின் சென்னையில் தீவிர ரோந்துப் பணியில் காவல்துறை

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கவிருக்கும் நிலையில், சென்னையில் மாலைக்குப் பின் தீவிர ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபடவிருக்கிறார்கள்.

News image

கோப்புப்படம்

Updated On :9 டிசம்பர் 2022, 9:17 am


சென்னை: மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கவிருக்கும் நிலையில், சென்னையில் மாலைக்குப் பின் தீவிர ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபடவிருக்கிறார்கள்.

புயல் காரணமாக காற்று பலமாக வீசும் என்பதால், சென்னையில், தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மாண்டஸ் புயல் கரையை கடக்கவுள்ளதால் சென்னையில் மாலைக்குப் பின் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ள காவலர்களுக்கு  சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனவே, அவசியமின்றி வெளியே செல்வோரைத் தடுக்க காவல்துறை ரோந்துப் பணி மேற்கொள்ளவிருக்கிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.