சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவொற்றியூரில் தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட போட்டி  இன்று தொடக்கம்

தென்மண்டல தேசிய பூப்பந்தாட்ட போட்டி திருவொற்றியூரில் இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

News image
திருவொற்றியூரில் நடைபெறும் தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட பட்டய போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்களுக்கு கே.பி.சங்கர் எம்எல்ஏ சீருடையும், காலணியும் வழங்கி வெற்றி பெற வாழ்த்தினார்.
Updated On :22 ஜூலை 2022, 10:28 am

DIN

திருவொற்றியூர்: தென்மண்டல தேசிய பூப்பந்தாட்ட போட்டி திருவொற்றியூரில் இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழகம், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் 43 வது தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட பட்டய போட்டி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இன்று திருவொற்றியூரில் தொடங்குகிறது. 

பகல்-இரவு போட்டியாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தேதிகளில் திருவொற்றியூரில் உள்ள அரசு கல்லூரி  பூப்பந்தாட்ட திடலில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு,  ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி பகுதிகளில் உள்ள ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கு பெறுகின்றனர். வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற் கோப்பையுடன் ரொக்க பரிசும் வழங்கப்பட உள்ளது. 

இந்த போட்டியினை திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இவ்விழாவில் தமிழக அமைச்சர் சிவ வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் மாதாவரம் எஸ்.சுதர்சனம், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். 

வெளிமாநிலங்களில்  வந்துள்ள விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் தங்குவதற்கான விரிவான ஏற்பாடுகளை சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் செய்துள்ளார். அதேபோல் அவர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 172 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழக அணியிலிருந்து 20 விளையாட்டு வீரர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் சீருடை, காலணி வழங்கி வெற்றி பெற வாழ்த்தினார். நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. ராட்சத இயந்திரங்கள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு விளையாட்டு மைதானம் சீராக்கப்பட்டது. இந்த போட்டியை காண ஏராளமான விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.