கோப்புப்படம்
கோப்புப்படம்

மெட்ரோ ரயில்கள் இனி காலை 5 முதல் இரவு 11 மணி வரை இயக்கம்

பொதுமக்களின் வசதிக்காக வியாழக்கிழமை முதல் அனைத்து நாள்களிலும் காலை 5 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published on

பொதுமக்களின் வசதிக்காக வியாழக்கிழமை முதல் அனைத்து நாள்களிலும் காலை 5 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி திங்கள் முதல் சனிக்கிழமை வரை, நெரிசல்மிகு நேரமான காலை 8 முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிஷ இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிஷ இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷ இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் காலை 5 முதல் இரவு 10 மணி வரை 10 நிமிஷ இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷ இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com