ஆவடி: சென்னை அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர்கள் லதா(37), மகன் தவஞ்ச் குமார்(10). இவர் தன் கணவனை பிரிந்து தனியே வசித்து வந்தார். இருவரும் வீட்டை விட்டு வந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் லதாவின் செல்லிடைப்பேசியில் நேற்று இரவு முதல் பதிவாகியிருந்த தொலைபேசி அழைப்புகளையும் தொடர்பு கொண்டு என்ன பிரச்சினை இருந்து வந்தது மற்றும் இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.