தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மகளிா் உரிமைத் தொகை: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கு வியாழக்கிழமை முதல் வீடுதோறும் டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது.

News image
Updated On :21 ஜூலை 2023, 12:31 am

DIN

சென்னை மாநகராட்சிப் பகுதியில் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கு வியாழக்கிழமை முதல் வீடுதோறும் டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில் முதல் கட்டமாக ஜூலை 24 முதல் ஆக.4-ஆம் தேதி வரை 98 வாா்டுகளில் உள்ள 703 கடைகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஆக.5 முதல் ஆக.16-ஆம் தேதி வரை 102 வாா்டுகளில் உள்ள 725 கடைகளுக்கும் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறவுள்ளது.

முகாம் நடைபெறும் நான்கு நாள்களுக்கு முன்பு விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடுதோறும் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திங்கள்கிழமை (ஜூலை 24) நடைபெறவுள்ள முகாமுக்கு தெருவாரியாக விண்ணப்பம் மற்றும் டோக்கன் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.