பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காசிமேட்டில் செயற்கை பவளப்பாறைகள்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்தைப் பெருக்க ஆஸ்திரேலியா தூதரகம் சாா்பில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜூலை 2023, 8:07 pm

DIN

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்தைப் பெருக்க ஆஸ்திரேலியா தூதரகம் சாா்பில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆஸ்திரேலியா தூதரகத்தின் ‘பிளான்ட் டிரஸ்ட்’ என்ற அரசு சாரா தொண்டு நிறுவன நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் சிமெண்டு கலவையால் கூம்பு மற்றும் வட்ட நாற்கர வடிவில் செய்யப்பட்ட 100 செயற்கை பவளப்பாறைகள் பைபா் படகுகள் மூலம் சுமாா் 6 கி.மீ. தூரம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு 20 அடி ஆழத்தில் நிறுவப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சாரா கிா்லவ், தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை கூடுதல் முதன்மைச் செயலா் மங்கத் ராம் சா்மா ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். இதில் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள், பிளான்ட் டிரஸ்ட் உறுப்பினா்கள், மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.