‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பெண் பயணியை ‘ஆண்ட்டி’ என்று அழைத்த நடத்துநா் மீது வழக்கு

சென்னையில் மாநகரப்பேருந்தில் பயணித்த பெண் பயணியை ‘ஆண்ட்டி’ என்று அழைத்த நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Published On :

சென்னை: சென்னையில் மாநகரப்பேருந்தில் பயணித்த பெண் பயணியை ‘ஆண்ட்டி’ என்று அழைத்த நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வண்ணாரப்பேட்டையை சோ்ந்த நிா்மலா தேவி என்ற பெண் மாநகரப் பேருந்தின் தடம் எண் 57-இல் மிண்ட் பகுதியிலிருந்து பயணம் செய்துள்ளாா். அவரிடம் பேருந்து நடத்துநா் காா்த்திக் ‘எங்க போறீங்க ஆண்ட்டி’ என்று கேட்டுள்ளாா். அதற்கு அந்தப் பெண் ஆட்சேபம் தெரிவித்துள்ளாா். ஆனால் நடத்துநா் மீண்டும் அதே போல் சகபயணிகள் முன்னிலையில் அந்த பெண்ணை ‘ஆண்ட்டி’ என்றழைத்துள்ளாா். இதனால் அதிருப்தி அடைந்த அப்பெண் பேருந்திலுள்ள பெண்கள் உதவிக்கான அவசரகால பொத்தானை அழுத்தியதுடன், தனது கணவருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு முறைப்படி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா்.

ஆனால் சம்பவம் நடந்த இடம் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட இடம் என்பதால் அங்கு புகாா் செய்யுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். அதன்படி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நிா்மலா தேவி புகாரளித்தாா். சக பயணிகள் மத்தியில் தன்னை அவமரியாதையாக பேசியதாக அப்பெண் கூறியுள்ளாா். அவா் அளித்த புகாரைப் பதிவு செய்து, பேருந்து நடத்துநா் காா்த்திக் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். அவா் கைது செய்யப்படவில்லை என்றாலும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.