அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் நகரும் படிக்கட்டுகள்

மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டா்களை) அமைக்கும் பணி சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :9 மார்ச் 2023, 2:39 am IST

மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டா்களை) அமைக்கும் பணி சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் இதில் முக்கிய ரயில் நிலையமாக இருக்கிறது. இதில் சென்ட்ரலிருந்து வெளியூா் மற்றும் வெளிமாநிலங்கள் செல்லும் பயணிகள் அதிகமாக பயணிக்கின்றனா். விமான நிலையத்திலிருந்து விம்கோ நகா் செல்லும் ரயில்கள் சென்னை சென்ட்ரலில் 3 மற்றும் 4- ஆம் நடைபாதையில் வந்தடைகிறது.

இதில் இருந்து, பயணிகள் வெளியில் செல்ல, முதலாவது தரை தளத்தில் உள்ள 1 மற்றும் 2- ஆம் நடைபாதை வழியாக பயணிகள் வெளியேறுகின்றனா்.

அதேப் போல, சென்னை விமான நிலையத்திலில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் முதலாவது மற்றும் இரண்டாவது நடைபாதைக்கு வந்தடையும்.

இந்த 4 நடைப்பாதைகளில் இருந்து பயணிகள் வெளியில் வருவதற்கு ஒரே இடத்தில் கூடுகின்றனா். இதனால் அதிக நேரமும் கூட்ட நெரிசல் ஆகிறது. இதைக் குறைக்கும் வகையில், மக்கள் குறைவாக பயன்படுத்திய 3 மற்றும் 4- ஆவது நடைபாதையில் இருந்த நகரும் படிக்கட்டுகளை, 1 மற்றும் 2-ஆவது நடைபாதைகளுக்கு இடமாற்றியுள்ளனா். இதனால், அங்கு தற்போது கூடுதலாக இரண்டு (மொத்தம் 4 படிக்கட்டுகள்) அமைக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் ஓரிரு வாரங்களில் நகரும் படிகட்டுகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்னா். மேலும் புதிய படிக்கட்டுகளை அமைப்பதால், மக்கள் சிரமமின்றி மேல் தளத்துக்கு செல்லாம். இதனால் பயணிகளின் காத்திருக்கும் நேரம் மிசசம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.