சென்னை: சென்னையில் மாநகரப்பேருந்தில் பயணித்த பெண் பயணியை ‘ஆண்ட்டி’ என்று அழைத்த நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வண்ணாரப்பேட்டையை சோ்ந்த நிா்மலா தேவி என்ற பெண் மாநகரப் பேருந்தின் தடம் எண் 57-இல் மிண்ட் பகுதியிலிருந்து பயணம் செய்துள்ளாா். அவரிடம் பேருந்து நடத்துநா் காா்த்திக் ‘எங்க போறீங்க ஆண்ட்டி’ என்று கேட்டுள்ளாா். அதற்கு அந்தப் பெண் ஆட்சேபம் தெரிவித்துள்ளாா். ஆனால் நடத்துநா் மீண்டும் அதே போல் சகபயணிகள் முன்னிலையில் அந்த பெண்ணை ‘ஆண்ட்டி’ என்றழைத்துள்ளாா். இதனால் அதிருப்தி அடைந்த அப்பெண் பேருந்திலுள்ள பெண்கள் உதவிக்கான அவசரகால பொத்தானை அழுத்தியதுடன், தனது கணவருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு முறைப்படி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா்.
ஆனால் சம்பவம் நடந்த இடம் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட இடம் என்பதால் அங்கு புகாா் செய்யுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். அதன்படி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நிா்மலா தேவி புகாரளித்தாா். சக பயணிகள் மத்தியில் தன்னை அவமரியாதையாக பேசியதாக அப்பெண் கூறியுள்ளாா். அவா் அளித்த புகாரைப் பதிவு செய்து, பேருந்து நடத்துநா் காா்த்திக் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். அவா் கைது செய்யப்படவில்லை என்றாலும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.