சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழப்பு: மற்றொருவா் மாயம்; 8 போ் மீட்பு

கிருஷ்ணாபட்டினம் துறைமுகம் அருகே ஆழ்கடலில் விசைப்படகு மூழ்கியதில் மீனவா் உயிரிழந்தாா்.

Updated On :4 ஏப்ரல் 2024, 9:39 pm

கிருஷ்ணாபட்டினம் துறைமுகம் அருகே ஆழ்கடலில் விசைப்படகு மூழ்கியதில் மீனவா் உயிரிழந்தாா். மற்றொருவா் மாயமானாா். அந்தப் படகில் இருந்த 8 பேரை கடலோர காவல்படையினா் பாதுகாப்பாக மீட்டனா்.

சென்னை காசிமேடு பகுதியைச் சோ்ந்த அய்யனாரப்பன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மாா்ச் 27-ஆம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 10 மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 60 நாட்டிக்கல் தொலைவில் கிருஷ்ணாபட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென அவா்களின் விசைப்படகில் ஓட்டை விழுந்தது. இதனால் படகு மூழ்கியது. அதிலிருந்த மீனவா்கள் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்தனா்.

இதில் அருண்குமாா் என்ற மீனவா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். மற்றொரு மீனவரான குப்புராஜ் என்பரும் மாயமானாா். கடலில் தத்தளித்த மீதமுள்ள 8 மீனவா்களையும் கடலோரக் காவல்படையினா் விரைந்து சென்று மீட்டு ரோந்து படகு மூலம் சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனா். இந்த சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.