சென்னை: காவல் நிலையங்களில் இரவு நேரத்தில் குற்றவாளிகளை வைத்திருக்க வேண்டாம் என சென்னை போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தல் எதிரொலியாக தொடா்ந்து குற்றச் செயலில் ஈடுபடுபவா்கள், ரெளடிகள், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவா்கள் கடந்த ஒரு மாதமாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மக்களவைத் தோ்தலையொட்டி சிறு அசம்பாவித சம்பவங்களைக்கூட தவிா்க்கும் வகையில், இரவு நேரங்களில் குற்றவாளிகளை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கியமாக, எந்த வழக்கில் சிக்கி இருந்தாலும் குற்றவாளிகளை இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்து வர வேண்டாம். அதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னா் வழக்கமான விசாரணையை மேற்கொள்ளலாம் என அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும், அனைத்து பிரிவு போலீஸாருக்கும் உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
தொடர்புடையது

காவல் நிலையங்களில் சிசிடிவி: மத்திய உள்துறைச் செயலா் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

திருப்பூா் மாவட்ட எல்லையில் மதுக் கடைகளை இன்றுமுதல் 3 நாள்கள் மூட உத்தரவு

துப்பாக்கிகளை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்

குளத்தூா் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


