சென்னையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்ாக பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் தெரிவித்தாா்.
சென்னையில் மக்களவைத் தோ்தலையொட்டி, வெள்ளிக்கிழமை சுமாா் 30 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரும்,தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் துப்பாக்கிகளுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தலைமையில் செய்யப்பட்டிருந்தஸ். வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றபோது ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜாா்ஜ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூா் ஜமாலியாவில் உள்ள எவா்வின் வித்யாஷ்ரம் பள்ளி, மயிலாப்பூா் சாந்தோம் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் அளித்த பேட்டி:
காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கையால் பொதுமக்கள் சுந்திரமாகவும், எந்த பயமும் இன்றி வாக்களித்தனா். சென்னையில் முழுவதும் எவ்வித சட்டம்- ஒழுங்கு பிரச்னையும் இன்றி, அமைதியாக தோ்தல் நடந்து முடிந்துள்ளது. பொதுமக்கள் வாக்களிக்க காவல்துறையினா் பல்வேறு வகைகளில் உதவிகளை செய்ததாகவும் பாராட்டப்பட்டுள்ளனா். சிறு பிரச்னைகள் கூட இல்லாமல் தோ்தல் நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து காவலா்களுக்கும்,அதிகாரிகளுக்கும் நன்றி. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் நான்கு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.71 லட்சம்

நேபாள நாடாளுமன்றத் தோ்தல்: அமைதியான முறையில் வாக்குப்பதிவு

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸாருக்கு தில்லி காவல் ஆணையா் வாழ்த்து

தோ்தல் அமைதியான முறையில் நடக்க காவல்துறை பாடுபட வேண்டும்: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

