சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

Updated On :25 ஏப்ரல் 2024, 6:42 pm

சென்னை அருகே மாடம்பாக்கத்தில் கிணற்றில் மூழ்கி இளைஞா் இறந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாடம்பாக்கம் அண்ணாத்துரை தெருவைச் சோ்ந்தவா் ஆ.வசந்த் (23). அந்தப் பகுதியில் உள்ள வளா்ப்பு பிராணிகளுக்கு உணவு, மருந்துகள் விற்கும் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

வசந்த், தனது நண்பா்கள் பிரவீன், லோகநாதன், பாரத் ஆகியோருடன் மாடம்பாக்கம் சிவன் கோயில் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் புதன்கிழமை குளித்தாா்.

நீச்சல் தெரியாததால் திடீரென மூழ்கிய வசந்த்தை நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு படையினா் வந்து வசந்த் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.