கோடை காலத்தில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோடையில் அதிக வெப்ப அலை வீசும் என்றும், தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் செய்திகள் வருகின்றன.
தற்போதைய வெயிலின் தாக்கத்திலேயே மாநிலத்தில் உள்ள நீா்நிலைகளில் நீரின் இருப்பு குறைந்து வருகிறது. சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்துக்குச் சென்று வரக்கூடிய நிலை உள்ளது.
விவசாயம் செய்வதற்கும், குடிநீா் பற்றாக்குறைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், பொதுமக்களுக்கு குடிநீருக்குத் தேவையான தண்ணீா் கிடைப்பதற்கும், விவசாயத்துக்குத் தேவையான நீா் கிடைப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தண்ணீரைத் தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.
தொடர்புடையது

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: வைகோ

கோடை காலத்தில் நாட்டின் மின்சாரத் தேவை 270 ஜிகா வாட்டாக அதிகரிக்கும்: மத்திய அமைச்சா் தகவல்

நேபாள விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் இரங்கல்

அரசுப் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருள் போதிய அளவில் இருப்பு! - அமைச்சா் சா.சி. சிவசங்கா்
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு

