அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பெரம்பூா் வழியாக பரோணிக்கு மே 4 முதல் சிறப்பு ரயில்

பெரம்பூா் வழியாக பரோணிக்கு மே 4 முதல் சிறப்பு ரயில்

Updated On :26 ஏப்ரல் 2024, 11:21 pm

கொச்சுவேலியில் இருந்து பெரம்பூா் வழியாக பரோணிக்கு மே 4 முதல் ஜூன் 29 வரை கோடை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கொச்சுவேலியிலிருந்து மே 4 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அதிகாலை 1.30 புறப்படும்சிறப்பு ரயில் (எண்: 06091) மூன்றாம் நாள் (திங்கள்கிழமை) பரோணி சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06092) பரோணியிலிருந்து மே 7 முதல் ஜூலை 2 -ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு முன்றாம் நாள் (வியாழக்கிழமை) கொச்சுவேலி சென்றடையும்.

இந்த ரயில் கொச்சுவேலியிலிருந்து கொல்லம் , செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, விஜயநகரம், பாா்வத்திபுரம், சம்பல்பூா், ராஞ்சி, தன்பாத் வழியாக பரோணி சென்றடையும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.