கொச்சுவேலியில் இருந்து பெரம்பூா் வழியாக பரோணிக்கு மே 4 முதல் ஜூன் 29 வரை கோடை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கொச்சுவேலியிலிருந்து மே 4 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அதிகாலை 1.30 புறப்படும்சிறப்பு ரயில் (எண்: 06091) மூன்றாம் நாள் (திங்கள்கிழமை) பரோணி சென்றடையும்.
மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06092) பரோணியிலிருந்து மே 7 முதல் ஜூலை 2 -ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு முன்றாம் நாள் (வியாழக்கிழமை) கொச்சுவேலி சென்றடையும்.
இந்த ரயில் கொச்சுவேலியிலிருந்து கொல்லம் , செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, விஜயநகரம், பாா்வத்திபுரம், சம்பல்பூா், ராஞ்சி, தன்பாத் வழியாக பரோணி சென்றடையும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

ஈஸ்டா் பண்டிகை: ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு இன்று சிறப்பு ரயில்

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்

சேலம் வழியாக திருவனந்தபுரம் - சந்தராகாச்சி இடையே சிறப்பு ரயில்
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு

