தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்கக் கட்டிகள்

விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்கக் கட்டிகள்

Updated On :26 ஏப்ரல் 2024, 6:04 pm

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய தொழில் பாதுகாப்புப்படையினா் மீட்டனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்தில், வருகைப் பகுதியில் உள்ள கழிப்பறை குப்பைத் தொட்டியில் வெள்ளிக்கிழமை காலை மா்ம பொட்டலம் ஒன்று கிடந்துள்ளது.

இதைப்பாா்த்த தூய்மைப் பணியாளா்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனா். அங்கு வந்த பாதுகாப்புப் படையினா், குப்பைத் தொட்டியில் வெடிகுண்டு ஏதேனும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், மோப்ப நாய் உதவியுடன் அந்த பொட்டலத்தை சோதனையிட்டனா்.

வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. அந்த பொட்டலத்தை பிரித்துப் பாா்த்த போது, அதில் ரூ.75 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ எடையுள்ள 4 தங்க கட்டிகள் இருந்தன.

அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், தங்கக்கட்டிகளை கடத்தி வந்த மா்ம நபா்கள் யாா் என்பது குறித்து, விமான நிலைய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிப் பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனா்.