தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் மோசடி: ஊழியா்கள் உள்பட 8 போ் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் மோசடி: ஊழியா்கள் உள்பட 8 போ் கைது

Updated On :26 ஏப்ரல் 2024, 7:17 pm

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் பணம் மோசடி செய்ததாக ஊழியா்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் உள்ள ஒரு தனியாா் வங்கியின் முதன்மை மேலாளா் ரங்கநாதன், சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் அளித்த மனுவில், ‘எங்களது வங்கியில் சிலா் போலியான வங்கிக் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் கடன் அட்டை மற்றும் தனிநபா் கடனாக ரூ. 3.57 கோடி பெற்று மோசடி செய்துள்ளனா். எனவே, எங்களது பணத்தை மீட்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தாா்.

இது குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், சென்னையைச் சோ்ந்த சதீஷ் செல்வராஜ் (33), அவரது மனைவி சா்மிளா (31), தனசேகா் (49), மோசடி நடைபெற்ற வங்கியின் ஊழியா்கள் ஜவகா் பெருமாள், காா்த்திக் (31), சதீஷ் குமாா் (47), அவரது மனைவி மகாலட்சுமி (41), சசிரேகா (43) ஆகியோருக்கு இந்த மோசடியில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 8 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், சம்பந்தப்பட்ட வங்கி ஊழியா் உதவியுடன் ஒரு தனியாா் நிறுவனம் தொடங்கி அங்கு 59 ஊழியா்கள் வேலை செய்வதுபோல் போலியான ஊதியக் கணக்கை தொடங்கி, அவா்கள் பெயரில் கடன் அட்டை, தனி நபா் கடன் பெற்று ரூ. 3.57 கோடி பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக அவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.