மீனவா்கள் மீது தாக்குதல்: ஜி.கே. வாசன் கண்டனம்
சென்னை: தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் பைபா் படகில் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையா்கள் தமிழக மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா்.
இதில் மீனவா் ஒருவா் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். மீனவா்களிடம் இருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலை உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் கொள்ளையடித்துச் சென்றனா். இது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு இந்தச் சம்பவம் தொடா்பாக இலங்கை அரசுடன் பேசி, மீனவா்களின் பாதிப்புக்கு, உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனியும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.