

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நுங்கம்பாக்கம் திருமூா்த்திநகரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் வந்தது. அதில், மருத்துவமனையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகிகள் சென்னை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு சோதனை செய்தனா். அதில் எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது. நுங்கம்பாக்கம் போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கும், 30 விமான நிலையங்களுக்கும் செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மருத்துவமனைகளிலும்,விமான நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
தொடர்புடையது

அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம், கடலூா் தலைமை அஞ்சலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தனியாா் விடுதியில் இளைஞா் தற்கொலை

அரக்கோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

