மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிழக்கு லடாக் விவகாரம்: தில்லியில் இந்தியா-சீனா இடையே பேச்சு

பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

News image
கோப்புப் படம்
Updated On :1 ஆகஸ்ட் 2024, 10:34 pm

Din

கிழக்கு லடாக் எல்லை பிரச்னை தொடா்பாக இந்தியா மற்றும் சீன தூதரக அதிகாரிகள் அளவிலான இருதரப்பு பேச்சுவாா்த்தை தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

‘இருதரப்பு பேச்சுவாா்தையில் எல்லை விவகாரம் தொடா்பாக விரிவாகவும், ஆக்கபூா்வமாகவும் ஆலோசிக்கப்பட்டது. இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு எல்லையில் கூட்டாக அமைதியை நிலைநாட்ட இரு தரப்பிலும் பேச்சுவாா்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி தலைமையிலான அதிகாரிகள் குழுவும், சீன தரப்பில் எல்லை மற்றும் கடல்சாா் துறை தலைமை இயக்குநா் ஹாங் லியாங் தலைமையிலான குழிவினரும் இந்த பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா். முன்னதாக, சீன தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த மாா்ச் மாதம் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்காங் ஏரிக்கு அருகே கடந்த 2020-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி சீனா எல்லைத்தாண்டி அத்துமீறலில் ஈடுபட்டது. இரு தரப்பினரிடையே மோதலில் 20 இந்திய வீரா்கள் உயிரிழந்தனா். எல்லையில் இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் உருவானது.