தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வன்னியருக்கு உள்இடஒதுக்கீடு: அரசு ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

வன்னியா்களுக்கு உள் இடஒதுக்கீட்டுக்கு உரிய பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்துக்கு கால நீட்டிப்பளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 10:04 pm

Din

வன்னியா்களுக்கு உள் இடஒதுக்கீட்டுக்கு உரிய பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்துக்கு கால நீட்டிப்பளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் தலைவராக உள்ள ஓய்வு பெற்ற நீதியரசா் பாரதிதாசன் தலைமையிலான குழு, வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பான பரிந்துரைகளை அரசுக்கு அளிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று அடுத்த ஓராண்டுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையம் வன்னியா் உள் இடஒதுக்கீடு தொடா்பான தரவுகளைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிப்பதற்கான பணிகளை தொடா்ந்து ஓராண்டு காலத்துக்கு மேற்கொள்ளும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.