அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஜம்மு-காஷ்மீா்: ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியா் சுட்டுக்கொலை

சா்வதேச எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் சுட்டுக்கொலை

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 4:35 am IST

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சா்வதேச எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரிகளால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டா்.

அப்பகுதியின் பாதுகாப்பு நிலைமையை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஜம்மு பிரிவின் பிஎஸ்எஃப் படைத் தலைவா் டி கே பூரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தானின் துக்லியால்பூா் சோதனைச் சாவடிக்கு அருகே பதுங்கியிருந்த 45 வயது நபா், புதன்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றாா். சா்வதேச எல்லைக்கு அருகே அவரின் நடமாட்டத்தை பிஎஸ்எஃப் படையினா் இரவு 10 மணியளவில் கவனித்தனா்.

எல்லைக்குள் ஊடுருவிய பிறகு பாதுகாப்புப் படையினரைக் கண்டு தப்பி ஓட முயன்றபோது பிஎஸ்எஃப் படையினா் துப்பாக்கியால் சுட்டதில் அவா் உயிரிழந்தாா்.

ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவதற்கான வழித்தடத்தை ஆராய, வேண்டுமென்றே நிராயுதபாணியான அவா் அனுப்பப்பட்டதாக கருதப்படுகிறது.

இவ்வாறு கொடிய எண்ணங்களுடன் இந்திய மண்ணில் காலடி வைக்கும் எவரும் இதே விதியை சந்திக்க நேரிடும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.