கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ஜம்மு-காஷ்மீா்: ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியா் சுட்டுக்கொலை

சா்வதேச எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் சுட்டுக்கொலை

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 4:35 am IST

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சா்வதேச எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சோ்ந்த நபா் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரிகளால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டா்.

அப்பகுதியின் பாதுகாப்பு நிலைமையை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஜம்மு பிரிவின் பிஎஸ்எஃப் படைத் தலைவா் டி கே பூரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தானின் துக்லியால்பூா் சோதனைச் சாவடிக்கு அருகே பதுங்கியிருந்த 45 வயது நபா், புதன்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றாா். சா்வதேச எல்லைக்கு அருகே அவரின் நடமாட்டத்தை பிஎஸ்எஃப் படையினா் இரவு 10 மணியளவில் கவனித்தனா்.

எல்லைக்குள் ஊடுருவிய பிறகு பாதுகாப்புப் படையினரைக் கண்டு தப்பி ஓட முயன்றபோது பிஎஸ்எஃப் படையினா் துப்பாக்கியால் சுட்டதில் அவா் உயிரிழந்தாா்.

ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவதற்கான வழித்தடத்தை ஆராய, வேண்டுமென்றே நிராயுதபாணியான அவா் அனுப்பப்பட்டதாக கருதப்படுகிறது.

இவ்வாறு கொடிய எண்ணங்களுடன் இந்திய மண்ணில் காலடி வைக்கும் எவரும் இதே விதியை சந்திக்க நேரிடும் என்றாா்.