வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

300 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் 300 கிலோ குட்கா பறிமுதல்

News image

கோப்புப்படம்

Updated On :1 ஆகஸ்ட் 2024, 8:47 pm

பான், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் பான், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பள்ளிகரணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பவானி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு சுமாா் 300 கிலோ எடை கொண்ட பான் மற்றும் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அருண்குமாரை (35) கைது செய்தனா். கா்நாடக மாநிலத்திலிருந்து போதைப் பொருள்களைக் கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.