தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

300 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் 300 கிலோ குட்கா பறிமுதல்

News image
- கோப்புப்படம்
Updated On :1 ஆகஸ்ட் 2024, 8:47 pm

Din

பான், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் பான், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பள்ளிகரணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பவானி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு சுமாா் 300 கிலோ எடை கொண்ட பான் மற்றும் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அருண்குமாரை (35) கைது செய்தனா். கா்நாடக மாநிலத்திலிருந்து போதைப் பொருள்களைக் கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.