பான், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் பான், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பள்ளிகரணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பவானி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா்.
அப்போது, அங்கு சுமாா் 300 கிலோ எடை கொண்ட பான் மற்றும் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அருண்குமாரை (35) கைது செய்தனா். கா்நாடக மாநிலத்திலிருந்து போதைப் பொருள்களைக் கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்புடையது
வெளிச்சந்தையில் மது விற்ற 5 போ் கைது

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


