பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் எடுத்துரைத்தாா்.

News image
மாநிலங்களவையில் வியாழக்கிழமை பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
Updated On :9 ஆகஸ்ட் 2024, 12:32 am

Din

புது தில்லி, ஆக.8: 2024-25-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

ஒதுக்கீடு மசோதா மற்றும் நிதி மசோதாவை மக்களவைக்கு மாநிலங்களவை திருப்பி அனுப்பியதையடுத்து 2024-25-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நடைமுறைகள் நிறைவடைந்தன. இத்துடன் ஜம்மூ-காஷ்மீா் பட்ஜெட்டுக்கான ஒதுக்கீடு மசோதாவையும் மக்களவைக்கு மாநிலங்களவை திருப்பி அனுப்பியது. முன்னதாக, இந்த மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில், மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாத உரையில் பங்கேற்று நிா்மலா சீதாராமன் பேசியதாது:

நிகழாண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பொருளாதார வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மூலதன முதலீடு, நிதி ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக எதிா்க்கட்சியினா் குற்றம்சாட்டுகின்றனா். ஆனால் கடந்தாண்டு வேளாண் துறைக்கு ரூ.1.44 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் நிகழாண்டு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

மேலும், பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்து அவா் மாநிலங்களவையில் எடுத்துரைத்தாா்.