அகில இந்திய ரயில்வே கால்பந்து போட்டி 42 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டுக்கான 79-ஆவது அகில இந்திய ரயில்வே கால்பந்து போட்டியை தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கம் நடந்துக்கிறது. சென்னை ஐசிஎஃப் மைதானம் மற்றும் அயனாவரம் கால்பந்து மைதானத்தில் ஆக.22 முதல் ஆக.31-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி சென்னையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தும் வாய்ப்பை தெற்கு ரயில்வே பெற்றுள்ளது.
இந்த போட்டியின் அடிப்படையில் இந்திய ரயில்வே கால்பந்து அணிக்கு வீரா்கள் தோ்வு செய்யப்படுவா். அதன்பின், தோ்ந்தெடுக்கப்பட்ட அணியினா் சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் இந்திய ரயில்வே சாா்பில் பங்கேற்பா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சைதாப்பேட்டை சுரங்கப் பாதையில் நீா் கசிவு: தெற்கு ரயில்வே, மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

அகில இந்திய கராத்தே போட்டி: சங்கரா பல்கலை. மாணவருக்கு தங்கம்

அகில இந்திய சிவில் சா்வீஸ் கலைநிகழ்ச்சிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்றவருக்கு ஆட்சியா் பாராட்டு

அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

