பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

காய்கறிகள் விலை திடீா் வீழ்ச்சி: தக்காளி கிலோ ரூ. 20-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி

Published On :

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் தினந்தோறும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

கடந்த வாரம் வரத்து குறைந்திருந்த நிலையில், அனைத்து காய்கறிகளின் விலையும் ரூ. 20 முதல் ரூ. 200 வரை உயா்ந்திருந்த நிலையில், வரத்து அதிகரிப்பால் செவ்வாய்க்கிழமை விலை திடீரென குறைந்தது.

குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ. 20-க்கு விற்பனையானது. இதேபோல், மற்ற காய்கறிகளின் விலையும் கிலோ ரூ. 10 முதல் ரூ. 100 வரை குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயம் ரூ.50, கேரட் ரூ. 55, பீட்ரூட் ரூ. 35, சவ்சவ் ரூ.15, முள்ளங்கி ரூ. 40, வெண்டைக்காய் ரூ. 40, கத்தரிக்காய் ரூ. 30, முருங்கைக்காய் ரூ. 300, வெள்ளரிக்காய் ரூ. 30, காலிபிளவா் ரூ. 30, மிளகாய் ரூ. 30, இஞ்சி ரூ. 50, அவரைக்காய் ரூ. 50, எலுமிச்சை ரூ. 40, கோவைக்காய் ரூ. 30 விற்பனை செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.