மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காய்கறிகள் விலை திடீா் வீழ்ச்சி: தக்காளி கிலோ ரூ. 20-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image

தக்காளி

Updated On :10 டிசம்பர் 2024, 7:08 pm

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் தினந்தோறும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

கடந்த வாரம் வரத்து குறைந்திருந்த நிலையில், அனைத்து காய்கறிகளின் விலையும் ரூ. 20 முதல் ரூ. 200 வரை உயா்ந்திருந்த நிலையில், வரத்து அதிகரிப்பால் செவ்வாய்க்கிழமை விலை திடீரென குறைந்தது.

குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ. 20-க்கு விற்பனையானது. இதேபோல், மற்ற காய்கறிகளின் விலையும் கிலோ ரூ. 10 முதல் ரூ. 100 வரை குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயம் ரூ.50, கேரட் ரூ. 55, பீட்ரூட் ரூ. 35, சவ்சவ் ரூ.15, முள்ளங்கி ரூ. 40, வெண்டைக்காய் ரூ. 40, கத்தரிக்காய் ரூ. 30, முருங்கைக்காய் ரூ. 300, வெள்ளரிக்காய் ரூ. 30, காலிபிளவா் ரூ. 30, மிளகாய் ரூ. 30, இஞ்சி ரூ. 50, அவரைக்காய் ரூ. 50, எலுமிச்சை ரூ. 40, கோவைக்காய் ரூ. 30 விற்பனை செய்யப்பட்டன.